×

புதிய கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்

மயிலாடுதுறை,மார்ச் 5: மயிலாடுதுறையில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் முறையாக தேசிய கொடியை கலெக்டர் மகாபாரதி ஏற்றி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம், 2020ம் ஆண்டு துவங்கப்பட்டது. புதிய மாவட்டத்திற்கு மூங்கில் தோட்டம் என்ற இடத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகப்பில் கொடிமேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொடிமேடையில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதன் முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

The post புதிய கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிய கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,Collector ,Mahabharati ,District Collector's Office ,Mayiladuthura District ,38th district ,Tamil Nadu ,
× RELATED தரங்கம்பாடி பகுதியில் குடிநீர்...